பளை பிரதேசத்தில், மாற்றுத்திறனாளி ஒருவருடைய, மிளகாய் செடிகளை மர்ம நபர்கள் பிடுங்கி எறிந்த நிலையில், இன்றைய தினம் யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து சம்பவம் தொடர்பில் கேட்டறிந்ததுடன் அவர்களுக்கு ஒரு தொகை நிதியையும் வழங்கினார்.
அதேவேளை அவர்களுக்கு சட்ட உதவி தேவைப்படும் பட்சத்தில் அதற்கு உரிய உதவிகளும் வழங்க தயார் என பாதிக்கப்பட்ட தரப்பினரிடம் உறுதி அளித்துள்ளார்.