மசூதி ஒன்றில் இடம்பெற்ற பயங்கரம் - 16 பேர் பலி..!!!




ஆப்கானிஸ்தான் நாட்டின் கந்தகாரில் உள்ள இமாம் பர்கா மசூதி அருகே இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 16 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் 32 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் நாட்டின் கந்தகாரில் உள்ள இமாம் பர்கா மசூதி அருகே இன்று (15) பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை என்பதால் மசூதியில் தொழுகை நடத்துவதற்கு ஏராளமானோர் கூடினர். இதை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் உயிரிழப்பு அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதுவரை எந்த அமைப்பும் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பொறுப்பு ஏற்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 8-ஆம் திகதி வடக்கு ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற பயங்கர குண்டு வெடிப்பில் சுமார் 100 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here