18 மணிநேர நீர்வெட்டு அமுல்..!!!




அளுத்கம, மத்துகம மற்றும் அகலவத்த கூட்டு நீர் விநியோக வேலைத்திட்டத்தின் அத்தியவசிய திருத்த வேலை காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (07) காலை 8 மணி முதல் 18 மணிநேரம் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் பேருவளை, அளுத்கம, தர்கா நகர், பெந்தர, களுவாமோதர, பிலமினாவத்த, பொம்புவல, பயாகல மற்றும் மங்கொன ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Previous Post Next Post


Put your ad code here