இருவேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 4 பேர் கைது..!!!




நோர்வூட் பொலிஸ் பகுதியில் இருவேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நான்கு பேர் நோர்வூட் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தார்.

அனுமதி பத்திரமின்றி சாமிமலை மானெலு பகுதியிலிருந்து இறைச்சிக்காக டிக்கோயா பகுதிக்கு இரண்டு காளை மாடுகளை கொண்டு சென்ற இரண்டு சந்தேக நபர்கள் நேற்று (30) மாலை நோர்வூட் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேக நபர்கள் கொண்டு சென்ற இரண்டு காளை மாடுகள் மற்றும் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட லொறி ஆகியன பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் ஹட்டன் நீதி மன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, நோர்வூட் எலிபடை கீழ் பிரிவு வீட்டுத்தோட்டத்தில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கல் அகழ்வில் ஈடுப்பட்ட இரண்டு நபர்பள் கைது செய்யப்பபட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களிடமிருந்து மாணிக்கல் அகழ்விற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் சிலவும் இதன் போது மீட்கப்பட்டுள்ளன.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலினையடுத்தே குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் இருவரும் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்கள் எதிர்வரும் 04 திகதி ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post Next Post


Put your ad code here