ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திக்க உள்ள இந்திய வெளிவிவகார செயலாளர்..!!!




இலங்கைக்கு 4 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷிங்ரிலா இன்று (04) ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திக்க உள்ளார்.

இன்று காலை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்க உள்ளதாக வௌிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்திய வெளிவிவகார செயலாளர் இன்று பிற்பகல் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் மற்றும் அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே ஆகியோரை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Previous Post Next Post


Put your ad code here