யாழில். வீட்டில் வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்த ஒருவர் கைது..!!!


ஏழாலையில் வீட்டில் வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

6 லட்சத்து ரூபாய்க்கு மேற்பட்ட பெறுமதியுடைய போதை மாத்திரைகளை 9 ஆயிரத்து 60 மாத்திரைகள் சந்தேக நபர்களிடம் கைப்பற்றப்பட்டது என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஏழாலையைச் சேர்ந்த 38 வயது நபரே இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான தலைமை பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்சிஸ் தலைமையிலான மாவட்ட குற்ற தடுப்பு பிரிவினர் இந்த கைது நடவடிக்கை முன்னெடுத்துள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here