அத்தனகல்ல, ஊராபொல பிரதேசத்தில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான தளபாட தொழிற்சாலையொன்றில் பாரிய தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இன்று (21) பிற்பகல் இடம்பெற்றுள்ள இந்த தீ விரைவாக தொழிற்சாலை முழுவதும் பரவலடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தீப்பரவல் ஏற்படுவதற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.