இரத்தினபுரி - கிரியெல்ல வீதியில் இன்று காலை சட்டத்தரணியின் மகன் ஒருவரை தாக்கிய சிரேஷ்டபொலிஸ் அதிகாரி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் தலைமையகத்தினால் இவ்வாறு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அபகீர்த்தியை ஏற்படுத்தும் விதமாக செயற்பட்டமை தொடர்பில் குறித்த பொலிஸ் அதிகாரிக்கு எதிராக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடித்துவக்கு மீதே இவ்வாறு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Tags:
sri lanka news