மோட்டார் சைக்கிள் மீது மரக்கிளை முறிந்து விழுந்து ஒருவர் பலி..!!!



மினுவங்கொடயில் இருந்து 18 ஆம் கட்டை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீது மரக்கிளை ஒன்று முறிந்து விழுந்துள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

33 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டுநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here