பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் தீர்மானிக்க விஷேட அமைச்சரவை கூட்டம்..!!!




விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்று நாளை (07) நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது சிமேந்து, பால்மா மற்றும் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலை குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில், இவ்வாரத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் இரண்டாவது முறை இதுவாகும் என்பது விஷேட அம்சமாகும்.
Previous Post Next Post


Put your ad code here