தொடருந்து போக்குவரத்து தொடர்பில் வெளிவந்த தகவல்..!!!
தொடருந்து போக்குவரத்து தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமையே இறுதித் தீர்மானம் எட்டப்படும் என தொடருந்து திணைக்கள பொதுமுகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ள கொவிட்-19 தடுப்பு செயலணியின் கூட்டத்தின் போதே இது தொடர்பில் இறுதி தீர்மானம் எட்டப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதுவரை சரக்கு தொடருந்துகள் மாத்திரம் போக்குவரத்தில் ஈடுபடும் என தொடருந்து திணைக்கள பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.