Tuesday 19 October 2021

சமந்தா நடிக்கும் புதிய படங்கள்..!!!

SHARE

வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு நகர்வது எப்படி என்பதை நன்கு அறிந்தவர்களில் சமந்தா மிகச் சிறந்த ஒருவர் என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறார். சமீப காலமாக தனிப்பட்ட வாழ்கையில் பல பிரச்சினைகளைச் சந்தித்து வந்த வேளையிலும், அதைக் கடந்து தனது நடிப்பு துறையில் கவனம் கொண்டுள்ளார்.

இந்த தசரா பண்டிகையில் சமந்தா பெயரிடப்படாத இரண்டு புதிய படங்களில் ஒப்பந்தமாகியுள்ளதை தனது ரசிகர்களுக்கு அறிவித்துள்ளார். இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகும் படங்கள் ஆகும்.

சமந்தா நடிக்கும் இந்த இரண்டு படங்கள் பற்றிய அறிவிப்பும் அதிகாரபூர்வமாக தசரா பண்டிகை அன்று வெளியாகியுள்ளது.

இதில் ஒரு படம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் பிரகாஷ் பாபு, பிரபுவின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்கத்தில் வித்தியாசமான திரைக்கதையாக உருவாகிறது.

மற்றொரு படம் நாயகிக்கு கதையில் முக்கியத்துவம் தரும் படமாக உருவாகிறது. இந்தப் படத்தை ஹரி சங்கர் மற்றும் ஹரிஷ் நாராயணன் இயக்க, சிவலிங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிக்கிறார். இவர் ஜெயம் ரவி நடித்த ‘மழை’ படத்தைத் தயாரித்தவர்.

தயாரிப்பாளர் சிவலிங்கா கிருஷ்ண பிரசாத் இந்தப் படம் பற்றிக் கூறுகையில், “இந்தப் படம் பற்றி என்னால் இப்போது எதுவும் கூற முடியாது. ஆனால், இந்தப் படத்தின் கதை தனித்துவமானது என்பதை மட்டும் என்னால் நிச்சயமாக கூற முடியும்.

இயக்குநர் ஹரி சங்கர் மற்றும் ஹரிஷ் நாராயணன் இந்தக் கதையை என்னிடம் கூறியபோது, நான் மிகுந்த ஆச்சரியத்துக்குள்ளானேன். அவர்கள் கதை சொன்னவிதமும், அதை உருவாக்க அவர்கள் வைத்திருந்த ஐடியாக்களும் புதிதாக இருந்தது.

இருவரும் இணைந்து இந்தக் கதையை எழுதியுள்ளபோது, அவர்கள் இருவரும் இணைந்து, இதை திரையில் அழகாக கொண்டு வரவும் முடியும் என நான் நம்புகிறேன். அதேபோல் இரு இயக்குநர்களுக்கும், அவர்களுடைய கிரியேட்டிவ் முடிவுகள் பற்றிய தெளிவான புரிதல் இருக்கிறது.

சமந்தாவை இந்தப் படத்தில் நடிக்க வைப்பது என்பது எல்லாரும் சேர்ந்து எடுத்த முடிவு. படத்தின் கதாபாத்திரத்துக்கு அவர்தான் பொருத்தமாக இருப்பார் என்று நான் உறுதியாக நம்பினேன். இயக்குநர்களும் அதைத்தான் நினைத்தார்கள்.

கதை தயாரான உடனேயே நாங்கள் சமந்தாவிடம் கூறினோம். அவரும் கதை பிடித்து உடனே ஒப்புக்கொண்டார். சமந்தாவை இந்தப் படத்தில் ஒரு புது அவதாரத்தில் காணலாம்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் தொடங்க உள்ளது. படத்தின் நடிகர் மற்றும் தொழில்நுட்பக் குழு பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாகும்” என்றார்.
வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு நகர்வது எப்படி என்பதை நன்கு அறிந்தவர்களில் சமந்தா மிகச் சிறந்த ஒருவர் என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறார். சமீப காலமாக தனிப்பட்ட வாழ்கையில் பல பிரச்சினைகளைச் சந்தித்து வந்த வேளையிலும், அதைக் கடந்து தனது நடிப்பு துறையில் கவனம் கொண்டுள்ளார்.

இந்த தசரா பண்டிகையில் சமந்தா பெயரிடப்படாத இரண்டு புதிய படங்களில் ஒப்பந்தமாகியுள்ளதை தனது ரசிகர்களுக்கு அறிவித்துள்ளார். இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் உருவாகும் படங்கள் ஆகும்.

சமந்தா நடிக்கும் இந்த இரண்டு படங்கள் பற்றிய அறிவிப்பும் அதிகாரபூர்வமாக தசரா பண்டிகை அன்று வெளியாகியுள்ளது.

இதில் ஒரு படம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் பிரகாஷ் பாபு, பிரபுவின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்கத்தில் வித்தியாசமான திரைக்கதையாக உருவாகிறது.

மற்றொரு படம் நாயகிக்கு கதையில் முக்கியத்துவம் தரும் படமாக உருவாகிறது. இந்தப் படத்தை ஹரி சங்கர் மற்றும் ஹரிஷ் நாராயணன் இயக்க, சிவலிங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிக்கிறார். இவர் ஜெயம் ரவி நடித்த ‘மழை’ படத்தைத் தயாரித்தவர்.

தயாரிப்பாளர் சிவலிங்கா கிருஷ்ண பிரசாத் இந்தப் படம் பற்றிக் கூறுகையில், “இந்தப் படம் பற்றி என்னால் இப்போது எதுவும் கூற முடியாது. ஆனால், இந்தப் படத்தின் கதை தனித்துவமானது என்பதை மட்டும் என்னால் நிச்சயமாக கூற முடியும்.

இயக்குநர் ஹரி சங்கர் மற்றும் ஹரிஷ் நாராயணன் இந்தக் கதையை என்னிடம் கூறியபோது, நான் மிகுந்த ஆச்சரியத்துக்குள்ளானேன். அவர்கள் கதை சொன்னவிதமும், அதை உருவாக்க அவர்கள் வைத்திருந்த ஐடியாக்களும் புதிதாக இருந்தது.

இருவரும் இணைந்து இந்தக் கதையை எழுதியுள்ளபோது, அவர்கள் இருவரும் இணைந்து, இதை திரையில் அழகாக கொண்டு வரவும் முடியும் என நான் நம்புகிறேன். அதேபோல் இரு இயக்குநர்களுக்கும், அவர்களுடைய கிரியேட்டிவ் முடிவுகள் பற்றிய தெளிவான புரிதல் இருக்கிறது.

சமந்தாவை இந்தப் படத்தில் நடிக்க வைப்பது என்பது எல்லாரும் சேர்ந்து எடுத்த முடிவு. படத்தின் கதாபாத்திரத்துக்கு அவர்தான் பொருத்தமாக இருப்பார் என்று நான் உறுதியாக நம்பினேன். இயக்குநர்களும் அதைத்தான் நினைத்தார்கள்.

கதை தயாரான உடனேயே நாங்கள் சமந்தாவிடம் கூறினோம். அவரும் கதை பிடித்து உடனே ஒப்புக்கொண்டார். சமந்தாவை இந்தப் படத்தில் ஒரு புது அவதாரத்தில் காணலாம்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் மாதம் தொடங்க உள்ளது. படத்தின் நடிகர் மற்றும் தொழில்நுட்பக் குழு பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாகும்” என்றார்.
SHARE