எரிபொருளுக்கு தட்டுப்பாடு? அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு..!!!




நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

எரிபொருட்களின் விலை அதிகரிப்பு ஏற்பட்டால் அதுபற்றி முன்கூட்டியே தெரிவிப்பதாகவும், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டால் அதனையும் முன்கூட்டியே அறிவிப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

இதேவேளை நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனதாரிகள் மிக நீண்ட வரிசையில் கடந்த இரண்டுநாட்களாக நின்றமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here