Tuesday 5 October 2021

விபத்தில் பெண் ஒருவர் பலி..!!!

SHARE



மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் வழுக்கிச் சென்ற காரணத்தினால் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்ற பெண் ஒருவர் கண்டேனர் ஒன்றின் சில்லில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

நேற்று (04) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு 14 பகுதியை சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கண்டேனர் வாகனத்தின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
SHARE