Pandora Papers - விசாரணைகள் ஆரம்பம்..!!!




விசேட விசாரணை குழுவொன்றை நியமித்து பண்டோரா பேப்பர்ஸில் வௌிப்படுத்தப்பட்ட இலங்கையர்கள் மற்றும் அந்த பரிவர்த்தனைகள் தொடர்பிலான விசாரணைகள் தற்போதைய நிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச மற்றும் ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் செயலாளர் அப்சரா கல்தேரா தெரிவித்தார்.

பண்டோரா பேப்பர்ஸில் வௌிப்படுத்தப்பட்ட இலங்கையர்கள் மற்றும் பரிவர்த்தனைகள் குறித்து உடனடி விசாரணைக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டதை அடுத்து இவ்வாறு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் ஒரு மாதத்திற்குள் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தியதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் இன்று பண்டோரா வௌிப்படுத்தல் குறித்து சர்வதேச விசாரணை ஒன்று தேவை என்று தெரிவித்திருந்தார்.
Previous Post Next Post


Put your ad code here