10 கஜ முத்துக்களுடன் மூவர் கைது..!!!




அம்பாறை வரிப்பத்தான்சேனை பகுதியில் சட்டவிரோதமான முறையில் 10 கஜ முத்துக்களை விற்பனை செய்ய முயன்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்முனை பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு நேற்று (21) கிடைத்த இரகசிய தகவலையடுத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட கஜ முத்துக்களை 10 மில்லியன் ரூபாவிற்கு விற்பனை செய்ய சந்தேகநபர்கள் முயற்சித்துள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
Previous Post Next Post


Put your ad code here