லண்டனில் தீ விபத்து - 4 இலங்கையர்கள் பலி..!!!




லண்டனில் வீடு ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் இலங்கையர்கள் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

தென்கிழக்கு லண்டனில் உள்ள பெக்ஸ்லிஹீத்தில் உள்ள வீடு ஒன்றில் இந்த தீ விபத்து இடம்பெற்றது.

இந்த தீ விபத்தில் தாய், 2 பிள்ளைகள் மற்றும் பாட்டி ஆகியோர் உயிரிழந்தனர்.

மற்றும் ஒரு நபர் வீட்டின் ஜன்னல் வழியாக குதித்து உயிர் தப்பிய போதிலும் அவரது கால்கள் உடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக லண்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Previous Post Next Post


Put your ad code here