7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டது..!!!


ஏழு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதற்கமைய கேகாலை, குருணாகல், இரத்தினப்புரி, களுத்துறை, கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பெருந்தோட்ட பகுதிகளில் வாழும் மக்களும் மண்சரிவு அபாயம் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை நாட்டின் பல பகுதிகளிலும் இன்றைய தினமும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என ளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here