இந்தியாவிலும் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் தொற்று..!!!


இந்தியாவின் உத்தரப்பிரதேசத்திற்கு வருகை தந்த 4 வெளிநாட்டவர்களுக்கு ஒமிக்ரான் தொற்றுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் கண்டறியப்பட்ட மிகவும் பரவக்கூடிய மாறுபட்ட கொரோனாவான ஒமிக்ரான் குறித்த கவலைகளுக்கு மத்தியில் மதுராவிற்கு வந்த 2 பெண்கள் உள்ளிட்ட 4 வெளிநாட்டுப் பயணிகளுக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த நான்கு பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த நால்வரும் சுற்றி வந்த பகுதிகளிலுள்ள மக்களுக்கு சோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here