தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒலி/ ஔிபரப்பு உரிமங்களை ஏலத்தில் வழங்க நடவடிக்கை எடுப்பதற்கான முன்மொழிவு நிதி அமைச்சர் பசில் ராஜஷபக்ஷவினால் முன்வைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் தற்போது இடம்பெற்றுவரும் 2021 ஆம் ஆண்டிற்கான சம கால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட உரையின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும்.....
* திரவப்பால் உற்பத்தியை அதிகரிக்க தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதிக்கு மேலதிகமாக 1,000 மில்லியன் ரூபாவை ஒதுக்க முன்மொழிவு....
* புதிய தொழிநுட்பத்துடன் கூடிய பெருந்தோட்டங்களை உருவாக்குவது எமது நோக்கமாகும்.
* கொரோனா முடக்க காலத்தில் வருமானத்தை இழந்த பாடசாலை வாகன உரிமையாளர்களுக்கு நிவாரணம் அளிக்க, 400 மில்லியன் ஒதுக்கீடு செய்ய முன்மொழிகிறேன்.
* வருமானத்தை இழந்த முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு 600 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு...
* தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு 1500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
Tags:
sri lanka news