Saturday 27 November 2021

முல்லைத்தீவு ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்..!!!

SHARE

முல்லைத்தீவு ஊடகவியலாளர் ஒருவர் மீது இராணுவத்தினர் மூர்க்கத்தனமாக தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான விஸ்வலிங்கம் விஷ்வா எனும் ஊடகவியலாளர் மீதே இராணுவத்தினர் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முள்ளிவாய்க்கால் பெயர்ப்பலகையை புகைப்படம் எடுத்த போது , அங்கிருந்த இராணுவத்தினர் அவர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

அதன் போது , அவர் தன்னை ஊடகவியலாளர் என அடையாளப்படுத்தியதுடன் , தான் இராணுவ முகாமையோ , இராணுவத்தினரையோ புகைப்படம் எடுக்கவில்லை என கூறிய போதிலும் இராணுவத்தினர் அவர் மீது மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
SHARE