யானை தாக்கியதில் ஒருவர் பலி..!!!




முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னாகண்டல் கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (24) இரவு 9 மணியளவில் வீட்டிலிருந்து மீன் பிடிப்பதற்காக சென்றுள்ள இவர் திரும்பி வராத நிலையில் இவரைத்தேடி அதிகாலை 2 மணிக்கு உறவினர்கள் சென்றவேளை காட்டுபகுதியில் இறந்து கிடந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் கெருடமடு, மன்னகண்டலை சேர்ந்த 65 வயதுடைய அழகன் கோபால்ராஜ் என்பவராவார்.

புதுக்குடியிருப்பு பொலிஸாரினால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது
Previous Post Next Post


Put your ad code here