இந்தியாவிடம் பாரிய தொகை கடனை பெறும் இலங்கை..!!!
எரிபொருள் கொள்வனவுக்காக இலங்கை அரசாங்கம் எதிர்வரும் வாரத்தில் இந்தியாவிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடன் திட்டத்தின் கீழ் பெறுகிறது.
இந்த நிலையில் பெற்றோலியம் தொடர்பான கடன்களுக்காக மேற்கு ஆசியா மற்றும் பிராந்திய பொருளாதார அமைப்புக்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்படுவதாக மத்திய வங்கியின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.