விபத்துக்குள்ளான வாகனங்களுக்கு கட்டணம்

 


விபத்துக்கு உள்ளாகும் மோட்டார் வாகனங்கள் சம்பந்தமாக கட்டணம் ஒன்றை அறவிட முன்மொழியப்பட்டுள்ளது.


2022 ஆம் ஆண்டிற்கான சம கால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தை பாராளுமன்றில் இன்று (12) சமர்ப்பித்து உரையாற்றிய போது நிதி அமைச்சர், பசில் ராஜபக்ஷ இதனை தெரிவித்தார்.

அவர் தனது உரையில்...

விபத்துக்கு உள்ளாகும் மோட்டார் வாகனங்கள் சம்பந்தமாக கட்டணம் ஒன்றை அறவிடுவதற்கும், அந்த கட்டணத்தை காப்புறுதியொன்றின் மூலம் மீள்நிரப்பல் செய்துகொள்வதற்கு சந்தர்ப்பத்தை வழங்குவதற்கும் முன்மொழிகிறேன்.

இதன் மூலம் இடம்பெறுகின்ற மோட்டார் வாகன விபத்துக்களை குறைத்துக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேபோன்று வாகனத்தை நவீனமயப்படுத்தல், மாற்றுதல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றுக்காக கட்டணம் ஒன்றை அறவிடுவதற்கும் சலுகைக் காலம் ஒன்றை உள்ளடக்கியதாக தண்டப்பணத்தை செலுத்துவதற்கு உட்பட்டு வாகனத்தை செலுத்துவதற்கு தகுதியான சட்டரீதியல்லாத மோட்டார் வாகனங்களையும் மோட்டார் சைக்கிளையும் சட்டரீதியாக பதிவு செய்வதற்கும் முன்மொழிகிறேன்.

அதேபோன்று விடுவித்துக் கொள்வதற்கு தொடர்புடைய வரித் தொகையை செலுத்தாமை மற்றும் ஏனைய பல்வேறு காரணிகளின் காரணமாக இலங்கை சுங்கத் திணைக்களத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சகல வாகனங்களையும் விடுவிப்பதற்கும் முன்மொழிகிறேன். உரிய வரித் தொகையையும் தண்டப் பணத்தையும் செலுத்துவதற்கு உட்பட்டு அவை இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளன.

இந்த முன்மொழிவின் மூலம் ரூபா நான்கு (4) பில்லியன் மேலதிக வருமானத்தை சம்பாதித்துக் கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது
Previous Post Next Post


Put your ad code here