கோண்டாவிலில் வீடு புகுந்து தாக்கிய வன்முறை கும்பல் - மூவர் கைது..!!!


யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் வீடு புகுந்து தாக்குதல் நடத்தி , ஒருவரை காயப்படுத்திய குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்களை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கோண்டாவில் செபஸ்தியன் வீதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று இரவு இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 06 பேர் கொண்ட கும்பல் புகுந்து வீட்டின் மீது தாக்குதலை மேற்கொண்டது. அத்துடன் வீட்டில் இருந்த நபர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் அந்நபர் காயமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் அறிந்த கோப்பாய் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்த போது, தாக்குதலாளிகள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

பொலிஸார் அவர்களில் ஒரு மோட்டார் சைக்கிளில் தப்பியோடிய மூவரை மடக்கி பிடித்து கைது செய்ததுடன் , அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்ட மூவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் . தப்பி சென்ற மூவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.
Previous Post Next Post


Put your ad code here