கிளிநொச்சியில் இளம் குடும்பஸ்தர் கொலை..!!!


இளம் குடும்பஸ்தர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கிளிநொச்சி தருமபுரம்-கல்மடுநகர் சம்புக்குளம் பகுதியில் நேற்று (30) இடம்பெற்றுள்ளது.

நண்பர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் தடியால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில், அம்பியூலன்ஸ் ஊடாக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று (01) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இராமையா இராமஜெயம் எனும் ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இறந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக தருமபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Previous Post Next Post


Put your ad code here