சிறைச்சாலையில் கைதிகளிடையே மோதல்

 


பதுளை சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

இந்த மோதல் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கிடையில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோதல் சம்பவத்தில் 5 கைதிகள் காயமடைந்து பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோதல் தொடர்பில் சிறைச்சாலை அத்தியட்சகர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார். 

Previous Post Next Post


Put your ad code here