மாதம்பை ஈரட்டக்குளம் பகுதியில் நேற்று (15) இடம்பெற்ற வீதி விபத்தில் தாயும், மகனும் உயிரிழந்துள்ளனர்.
கந்தானை களுவாஇருப்புவ பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய மகனும், 54 வயதுடைய தாயுமே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் உயிரிழந்த தாயும், மகனும் மோட்டார் சைக்கிளில் அநுராதபுரத்திற்கு சென்றுவிட்டு, மீண்டும் கந்தானை பகுதியை நோக்கிப் பயணம் செய்த போது மாதம்பை ஈரட்டக்குளம் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் உள்ள பெரிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதன்போது, படுகாயமடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் உடனடியாக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் அவ்விருவரும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மாதம்பை பொலிஸார் கூறினர்.
இந்த விபத்து சம்பவம் தொடர்பில் மாதம்பை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பெதும் குமாரவின் ஆலோசனையில் போக்குவரத்து பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:
sri lanka news