கொழும்பில் தங்காபரண விற்பனை நிலையமொன்றில் கத்தி குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு - செட்டியார் தெரு பகுதியிலுள்ள தங்காபரண விற்பனை நிலையமொன்றில் இன்று மதியம் கத்தி குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. கத்தி குத்து சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த நபர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணையில் தங்காபரண விற்பனை நிலையத்தில் இருந்த, இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்தே இந்த கத்தி குத்து சம்பவம் நேர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இந்த கத்தி குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேகநபர் காவல் நிலையத்தில் சரணடைந்ததை அடுத்து, கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்.