உயர்தர பரீட்சையில் புதிய பாடம்..!!!




2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு கொரிய மொழி பாடமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொரிய குடியரசின் பிரதிப் பிரதமர் மற்றும் கல்வி அமைச்சருக்கு இடையில் சியோல் நகரில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தென் கொரியாவில் பணிபுரியும் 22,000 இலங்கையர்களைப் பற்றிக் குறிப்பிட்ட வெளிவிவகார அமைச்சர், இலங்கையில் கொரிய மொழி புலமையை இலக்காகக் கொண்ட கற்றல் கற்கைநெறிகளின் பிரபல்யம் குறித்து குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸுக்குப் பதிலளித்த பிரதிப் பிரதமர் யூ இயூன் ஹை, இலங்கையில் தொழிற்கல்வி மற்றும் பயிற்சித் துறையின் முன்முயற்சிகளுக்கு விரிவான ஆதரவை வழங்குவதில் கொரியக் குடியரசு அக்கறை கொண்டுள்ளதாக தெரிவித்தார்
Previous Post Next Post


Put your ad code here