Saturday 1 January 2022

முல்லைத்தீவில் புத்தாண்டு தினத்தில் சோகம்; விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு..!!!

SHARE

முல்லைத்தீவு கேப்பாபுலவு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் - டிப்பர் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ள நிலையில் ஒருவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்றில் மூன்று இளைஞர்கள் பயணித்த போது , எதிரே வந்த டிப்பர் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானதாகவும் , அதில் இருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர் எனவும் , படுகாயமடைந்த இளைஞனை அவ்விடத்தில் கூடியோர் மீட்டு நோயாளர் காவு வண்டி மூலம் முல்லைத்தீவு மாவட்ட வைத்திய சாலையில் அனுமதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
SHARE