Thursday 6 January 2022

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு சென்ற மூதாட்டியின் நகைகள் திருட்டு..!!!

SHARE

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறச் சென்ற வயோதிப பெண்ணின் 3 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளதாக , பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் குறித்த வயோதிப பெண் இன்றைய தினம் வியாழக்கிழமை , சிகிச்சையின் நிமித்தம் , "எக்ஸ்ரே" எடுப்பதற்காக சென்ற போது, தான் அணிந்திருந்த தங்க சங்கிலி மற்றும் காப்பு ஆகியவற்றினை கழட்டி , தனது கைப்பையினுள் வைத்து விட்டு சென்றுள்ளார்.

இதையடுத்து அவர் திரும்பி வந்து கைப்பையினை பார்த்த போது , அதனுள் இருந்த நகைகள் களவாடப்பட்டு இருந்தமையை கண்ணுற்று , வைத்தியசாலை நிர்வாகத்திடம், முறையிட்டுள்ளார்.

நிர்வாகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய வைத்தியசாலை பொலிசாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வருவோர் நகைகள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை கொண்டு வருவதனை தவிர்த்துக்கொள்ளுமாறு, வைத்தியசாலை நிர்வாகம் பல தடவைகள் எச்சரித்து வந்துள்ளது.

தினமும் வைத்தியசாலைக்கு பெருமளவானோர் , பல்வேறு பகுதிகளில் இருந்து வருவதனால் , சிகிச்சைக்கு வருவோர் தமது உடமைகளை தாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டிய தேவையுள்ளது. அதனால் பெறுமதியான உடமைகளுடன் வருவதனை தவிர்த்துக்கொள்ளுமாறு ,வைத்தியசாலை நிர்வாகம் கோரியுள்ளது.
SHARE