தெஹிவளையில் முதலை தாக்குதலுக்கு உள்ளாகி ஒருவர் பலி..!!!




தெஹிவளை கடற்கரையில் முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி சுழியோடி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மீன்பிடியில் ஈடுபட்டு வந்த சுழியோடி ஒருவரே இவ்வாறு முதலையின் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முதலையின் தாக்குதலில் படுகாயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் தற்போது களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் இரத்மலானை ரயில் நிலைய குடியிருப்பில் வசிக்கும் 58 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்
Previous Post Next Post


Put your ad code here