வட்டுக்கோட்டையில் விபத்து - இளைஞன் உயிரிழப்பு..!!!


யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, அராலி செட்டியர் மடம் சந்தியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அவருடன் பயணித்த மற்றைய இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

உடையார் கட்டு - விசுவமடு பகுதியை சொந்த இடமாகக் கொண்ட தற்போது, வட்டுக்கோட்டை சிந்துபுரம் பகுதியில் வசித்து வரும் கந்தசாமி நிரோஜன் (வயது 22) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த அல்பினோ வசந்த் (வயது 20) என்ற இளைஞரே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த வீதியில் ஆபத்தான வளைவு உள்ளது எனவும் , அதில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் வேக கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
Previous Post Next Post


Put your ad code here