மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை பகுதியில் வைத்து நேற்று இரவு கைக்குண்டுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று இரவு பாலமுனையில் உள்ள பொலிஸ் காவலரணுக்கு அருகில் வைத்தே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் காத்தான்குடி பகுதியை சேர்ந்தவர் எனவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்
Tags:
sri lanka news