Monday 25 April 2022

லண்டனில் 3 பெண்கள் உள்ளிட்ட 4 பேர் குத்திக்கொலை : ஒருவர் கைது..!!!

SHARE

பிரிட்டனின் லண்டன் நகரில் 3 பெண்கள் உள்ளிட்ட நான்கு பேர் இன்று குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த சம்பவத்தில் 3 பெண்களும் ஆண் ஒருவரும் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

லண்டன் தென்பகுதியிலுள்ள சௌத்வாக் பகுதியில் உள்ள வீடொன்றில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேரும் ஒருவரையொருவர் நன்கு அறிந்தவர்கள் என்றும் பொலிஸாரின் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவத்துடன் சந்தேகத்தின் பேரி நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
SHARE