
காலி, தவலம எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் நேற்றிரவு முதல் எரிபொருள் எடுப்பதற்காக தனது வாகனத்தினுல் இருந்துள்ளதாக செய்தியாளர் தெரிவித்தார்.
அந்த நபர் பின்னர் வாகனத்தில் உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் படுவத்தையைச் சேர்ந்த 38 வயதானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் ஹினிதும வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Tags:
sri lanka news