காலிமுகத்திடல் பகுதியில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மத்தியில் பாடிக்கொண்டிருந்த இலங்கையின் ரப் பாடகர் சிராஸ் யூனுஸ் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.
ஜனாதிபதியும் அரசாங்கமும் உடனடியாக பதவி விலகுமாறு கோரி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னாள் கடந்த 4 நாட்களாக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று 11 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மக்கள் மத்தியில் பாடலைப் பாணக்கொண்டிருந்த பாடகர் சிராஸ் யூனுஸ் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று இரவும் குறித்த நபர் அந்த இடத்தில் பாடிக்கொண்டிருந்த காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tags:
sri lanka news