ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகினார் ஹரீன் எம்.பி..!!!
ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி சுயாதீனமாக செயற்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஹரீன் மேலும் தெரிவிக்கையில்,
“இந்த நாட்டிற்கு விரைவில் அரசாங்கமொன்று தேவை. இதை நாம் இனியும் தாமதிக்க முடியாது. ஐக்கிய மக்கள் சக்தி தாமதப்படுத்தியதால் நான் சுயாதீன இருக்க முடிவு செய்துள்ளேன் மற்றும் அரசாங்கத்தை அமைப்பதற்கான செயல்முறையை ஆதரிக்கிறேன், ”
தேர்தலில் மக்கள் ஆணையுடன் ஆட்சியைக் கைப்பற்றுவது சிறந்தது தான். ஆனால் அதற்கான நேரம் இதுவல்ல. இதை நாம் எவ்வளவு தாமதப்படுத்துகிறோமோ அந்த அளவுக்கு நாடு பாதிக்கப்படும்” என்று ஹரீன் பெர்னாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.