கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கைகள் நாளை இடம்பெறாது..!!!


நாளைய தினம் (06) கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கைகள் இடம்பெற மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, ஒருநாள் மற்றும் பொதுவான சேவைகள் உள்ளடங்களாக பொதுமக்களுக்கான எந்தவொரு சேவைகளும் இடம்பெறாது என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நாளை நாடு முழுவதும் ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளதன் காரணமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here