இடைக்கால அரசாங்கத்தின் நிதி அமைச்சராகவும் ரணில் ?


ஜனாதிபதியால் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ஐ.தே. க. தலைவர் ரணில் விக்ரமசிங்க, இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சர்வையில் நிதி அமைச்சுப் பொறுப்பினையும் வகிப்பார் என அறிய முடிகிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதற்கான விருப்பத்தை, ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வெளிப்படுத்தியதாக நம்பகரமான வட்டாரங்கள் தெரிவித்தன.

முதலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் நிதி, நீதி அமைச்சர் அலி சப்றியிடம் நிதி அமைச்சின் பொறுப்புக்களை தொடருமாறு கோரியுள்ளார். அவர் அதனை தனது குடும்பத்தாரின் விருப்பமின்மையை வெளிப்படுத்தி மறுத்துள்ளதாக அறிய முடிகிறது.

இந் நிலையில் அடுத்த தெரிவாக, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ர உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவை அப்பதவிக்கு நியமிக்க முயற்சிக்கப்ப்ட்டுள்ளது.

எனினும் அரசியல் கொள்கைகளுக்கு மதிப்பளித்து அவரும் நிதி அமைச்சினை ஏற்க மறுத்துள்ள பின்னணியிலேயே அவ்வமைச்சை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பொறுப்பிலேயே வைத்திருக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக அறிய முடிகிறது.
Previous Post Next Post


Put your ad code here