Wednesday 25 May 2022

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கலாம்..!!!

SHARE

சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் நாளைய தினம் வியாழக்கிழமையும் இடம்பெறாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள லிட்ரோ நிறுவனம் இதுகுறித்து தெரிவித்துள்ளது.

நேற்றும், இன்றும் சிலிண்டர்கள் விநியோகிக்கப்படாது என, அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே மீண்டும் நாளையும் விநியோகிக்கப்பட மாட்டாது என இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதேவேளை, லிட்ரோ நிறுவனமானது, சமையல் எரிவாயுவின் விலையை மீண்டும் அதிகரிக்க அரசாங்கத்திடம் அனுமதி கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலை 5 ஆயிரம் ரூபாவை விட அதிகரிக்கலாம் என அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


SHARE