காரைநகர் தவறணையில் கத்திக்குத்து - இளைஞன் படுகாயம்..!!!


யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் உள்ள கள்ளுத்தவறணையில் இளைஞர்களுக்கு இடையில் ஏற்பட்ட தர்க்கம் கத்திக்குத்தில் முடிவடைந்ததில் இளைஞனொருவர் படுகாயமடைந்துள்ளார்.

சுழிபுரம் பகுதியை சேர்ந்த 28 வயதுடைய இளைஞனே படுகாயமடைந்த நிலையில் காரைநகர் வலந்தலை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

காரைநகரில் உள்ள கள்ளுத்தவறணையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியளவில் கள்ளு அருந்திக்கொண்டிருந்த இரு இளைஞர்கள் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைக்கலப்பாக மாறி, கத்திக்குத்தில் முடிவடைந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை கடந்த திங்கட்கிழமை யாழ்ப்பாணம் வல்லை பகுதியில் உள்ள மதுபான சாலை ஒன்றில் இரு இளைஞர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட தர்க்கம் போத்தல் குத்தில் முடிவடைந்ததில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here