2022 மே மாதம் 06 ஆம் திகதி முதல் 08 ஆம் திகதி வரை நாளொன்றுக்கு மூன்று மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டை மேற்கொள்ள பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,M,N,O,P,Q,R,S,T,U,V,W வலயங்களில் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை 2 மணி நேரமும், மாலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரை 1 மணி 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
இதற்கிடையில், CC வலயங்களுக்கு காலை 6 மணி முதல் இரவு 09.20 மணி வரை 3 மணி நேரம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.