குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் இடைநிறுத்தப்பட்டிருந்த வழமையான சேவைகள் நாளை முதல் மீண்டும் வழமைக்கு திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாளை முதல் ஒரு நாள் கடவுசீட்டு வழங்கும் நடவடிக்கைகளை தவிர்ந்த ஏனைய சேவைகள் வழமைபோன்று இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனணி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறுகள் காரணமாக கடவு சீட்டு வழங்கும் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் எதிர்வரும் 10 ஆம் திகதி கடவு சீட்டுக்களை பெற்றுக்கொள்ளவிருப்பவர்கள் கட்டாயம் முன்பதிவு செய்ய வேண்டும் எனவும் குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
Tags:
sri lanka news