Saturday 7 May 2022

வீடொன்றில் இருந்து பெருந்தொகை கேரள கஞ்சா மீட்பு..!!!

SHARE



காத்தான்குடி பிரதேசத்தில் கஞ்சா வியாபாரி ஒருவரின் வீட்டை நேற்று முன்தினம் (05) இரவு முற்றுகையிட்ட விசேட அதிரடிப்படையினர் அங்கிருந்து 6 கிலோ 910 கிராம் கொண்ட கேரளா கங்சாவை மீட்டதுடன் கஞ்சா வியாபாரி ஒருவரை கைது செய்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான நேற்று முன்தினம் இரவு களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பிரேமரத்தினா தலைமையிலான அதிரடிப்படையின் குறித்த வியாபாரியின் வீட்டை முற்றுகையிட்டனர்

இதன் போது வியாபாரத்துக்காக பொதி செய்யப்பட்ட நிலையில் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6 கிலோகிராம் 910 கிராம் கொண்ட கஞ்சாவை மீட்டதுடன் கஞ்சாவியாபாரி ஒருவரை கைது செய்தனர்

விசேட அதிரடிப்படையினர் கைது செய்யப்பட்டவர் மற்றும் மீட்கப்பட்ட கஞ்சாவுடன்; ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இவரை நீதிமன்றில் ஆஜா்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
SHARE