தனிமையில் வாழ்ந்த மூதாட்டி கழுத்தறுத்துக் கொலை - காங்கேசன்துறையில் சம்பவம்..!!!


காங்கேசன்துறை - கொல்லங்கலட்டியில் வீட்டில் தனிமையில் வாழ்ந்த மூதாட்டி கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மூதாட்டி அணிந்திருந்த நகைகள் கொள்ளையடிக்கப்படாத
நிலையில் காணப்படுவதனால், கொலைக்கான காரணம் கண்டறியப்படவில்லை என்று காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

அப்பகுதியை சேர்ந்த சாணை தவமணி (வயது-78) என்ற மூதாட்டியே சடலமாக மீட்கப்பட்டார்.

மூதாட்டியின் வீட்டு வளாகத்திலுள்ள தோட்டத்துக்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை தண்ணீர் இறைப்பதற்கு சென்ற உறவினர் ஒருவர் மூதாட்டி குருதிக் காயங்களுடன் சடலமாக காணப்பட்டதை அறிந்து காங்கேசன்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Previous Post Next Post


Put your ad code here