Tuesday 28 June 2022

சடலங்களை அடையாளம் காண உதவுமாறு யாழ் பொலீஸார் கோரிக்கை..!!!

SHARE

யாழ் போதனா வைத்தியசாலையில் அடையாளம் காணப்படாத இரு ஆண்களின் சடலங்களையும் அடையாளம் கண்டு பொறுப்பேற்கும்படி யாழ் பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி உறவினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ,

கடந்த 29.05.22. அன்று பெயர் முகவரியின்றிய நிலையில் சிகிச்சை பெற்ற ஆண் ஒருவர் சிகிச்சை பலனின்றி 06.06.2022 அன்று இறந்துள்ள நிலையிலும் ,

22.06.2022 அன்று யாழ். கோட்டை அகழியில் கண்டெடுக்கப்பட்ட 60 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலமும் யாழ் போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. எனவே இரு சடலங்களையும் மிக விரைவில் அடையாளம் கண்டு பொறுப்பேற்று உதவுமாறு உறவினர்களிடம் கோரிக்கைவிடப்பட்டுள்ளது என்றுள்ளது.

யாழ்.தர்மினி
SHARE