யாழ். வண்ணார்பண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் கொடியேற்றம்..!!!



பல்நெடு வரலாற்றைத் தன்னகத்தே சுமந்த பாரம்பரியம் மிக்கதும், தமிழ் மன்னர்களால் போற்றி வழிபடப்பட்டதுமான வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை (19.5.2022) காலை-9 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

தொடர்ந்தும் 25 தினங்கள் காலை, மாலை உற்சவங்களாகச் சிறப்பாக இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவப் பெருவிழாவில் அடுத்தமாதம்-6 ஆம் திகதி புதன்கிழமை மஞ்சத் திருவிழாவும், 9 ஆம் திகதி சனிக்கிழமை மாலை கைலாசவாகன உற்சவமும், 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை வேட்டைத் திருவிழாவும், மாலை குதிரை வாகனத் திருவிழாவும், 11 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை சப்பரத் திருவிழாவும், 12 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை-6 மணிக்கு வசந்தமண்டபப் பூசையைத் தொடர்ந்து தேர்த் திருவிழாவும், 13 ஆம் திகதி புதன்கிழமை காலை-9 மணிக்கு காளிகா தீர்த்த புஷ்கரணியில் தீர்த்த உற்சவமும், அன்றையதினம் மாலை-6.45 மணிக்கு கொடியிறக்க உற்சமும் நடைபெறும் என மேற்படி ஆலய தர்மகர்த்தா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இவ்வாலய மஹோற்சவப் பெருவிழாவின் 25 தினங்களும் மேற்படி ஆலயத் தொண்டர் சபையினரால் அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

படங்கள்: ஐ.சிவசாந்தன்

















































Previous Post Next Post


Put your ad code here