புதிய கூட்டணியின் தலைமை தொடர்பில் வாசுதேவவின் முன்மொழிவு..!!!
பாராளுமன்றத்தில் அரசாங்கத்தில் சாராத கட்சிகள் இணைந்து அமைக்கவுள்ள புதிய கூட்டணியின் தலைமைத்துவம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என ஜாதிக நிதஹஸ் பெரமுனவின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கட்சி பிரதிநிதிகளுடன் நேற்று பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அந்த பதவிக்கு தனது பெயரை முன்மொழிவது பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவின் தனிப்பட்ட கருத்து மட்டுமே என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.